பயணம் புதிது..

பயணம் புதிது. .
  • பாராசூட் மூலம் முதன்முதலில் குதித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் கேப்டன் பெர்ரி. 1912 ஆம் ஆண்டு இவர் மத்திய அமெரிக்காவிலுள்ள மிஸ்சோரியிலிருக்கும் செயிண்ட் லூயிஸ் என்ற இடத்தில் விமானத்தில் பறந்தபோது வானிலிருந்து குதித்தார்.

  • இதே போல் பாராசூட் மூலம் முதன்முதலில் குதித்த பெண் என்ற பெருமையைப் பெற்றவர் ஜார்ஜியா பிராட்விக் என்பவர் ஆவார். இவர் 1913 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 21ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமானத்திலிருந்து பாராசூட் மூலம்  குதித்தார். 
  • ராக்கெட்மூலம் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு லைக்கா என்ற பெண் நாய்.1957 அம் ஆண்டு அப்போதய சோவியத் யூனியன் அனுப்பிய ராக்கெட் மூலம் லைக்கா விண்வெளிக்குச் சென்றது.
  • அதன் பிறகு 1958 ஆம் ஆண்டு லாஸ்கா மற்றும் பென் ஜீ என்ற இரு எலிகளை அமெரிக்கா விண்வெளிக்கு அனுப்பியது.
  • 1961 ஆம் ஆண்டு அமெரிக்கா ஹாம் என்ற சிம்பன்சி  குரங்கை விண்வெளிக்கு அனுப்பியது.
  • 1963 ஆம் ஆண்டு ஃப்ரான்ஸ் பெலிட்டி என்ற பூனையை விண்வெளிக்கு அனுப்பியது.
படம்:img.nauticexpo.com.



Share:

மாலைமாற்று சொற்கள்

மாலைமாற்று சொற்கள்



இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் படித்தாலும் எழுதினாலும் ஒரே போல இருக்கும் சொற்கள் மாலைமாற்று அல்லது இருவழியொக்கும் சொற்கள்
 (Palindromes ) எனப்படும். 
சுருங்கக்கூறின்,
எழுத்துக்களை ஈறுமுதலாகப் படித்தாலும் பாட்டு மாறாத கவிவகை; இருவழியொக்கும் சொல்  மாலைமாற்று ஆகும்.
தமிழ் இலக்கியத்தில் ஓவியக் கவி (சித்திரக்கவி) மிறைக் கவி ஆகிய பிரிவுகளுள் மாலைமாற்றுஅடங்கும்.   
மாலைமாற்று மாலையின் நுனியை மாற்றிப் பிடிப்பதுபோல அமைந்திருக்கும். அதாவது, ஒரு பாடலின் முதல் வரியைத் தொடக்கத்திலிருந்து இறுதிவரை படித்துக்கொண்டே வந்து, பின்பு அதையே இறுதியிலிருந்து தொடக்கம் வரை மாற்றிப் படித்துவந்தால், அந்த அமைப்பு இரண்டாவது வரியில் இருப்பதைக் காணலாம். இதுவும் சித்திரக்கவி வகையைச் சேர்ந்தது. இவ்வாறு ஒரு மாலையின் நுனியும் இறுதியும் மாறி மாறி அமைந்திருப்பதால், இது "மாலைமாற்றுப் பதிகம்' எனப் பெயர் பெற்றது.
                                                                                                              ( நன்றி: தமிழ் விக்சனரி)
மாலைமாற்று என்பதற்கான ஆங்கிலச் சொல்லான Palindrome என்பது கிரேக்க வேர்ச் சொற்களிலிருந்து பெறப்பட்டு ஆங்கில எழுத்தாளரான பென் சான்சன் என்பவரால் 17ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது.
மாலைமாற்று நிறைய மொழிகளில் இருக்கிறது. தமிழ்மொழியில், தமிழ் 
இலக்கியத்தில் மாலைமாற்று வடிவில் பதிகமே
 இருக்கிறது. திருஞானசம்பந்தர் பாடிய திருமாலைமாற்றுப் பதிகத்தில் காப்புச்
 செய்யுளும் சேர்த்து மொத்தம் 11 மாலைமாற்றுச் செய்யுள்கள் இருக்கின்றன. 

தமிழில் உள்ள சில மாலைமாற்று  சொற்கள் மற்றும் வாக்கியங்கள்
சிலவற்றை இங்கு பட்டியலிட்டுள்ளேன்.
  1. விகடகவி
  2. குடகு
  3. திகதி
  4. தேடாதே
  5. கைரேகை
  6.  விரவி  
  7. மாமா
  8. தாத்தா 
  9. பாப்பா
  10. தேரு வருதே
  11. மாடு சாடுமா
  12. மோரு தாருமோ
  13. மோரு வருமோ
  14. தோடு ஆடுதோ
  15.  மாலா போலாமா? 
  16. மோக ராகமோ? 
  17. மேளதாளமே 
  18. மாடு ஓடுமா? 
  19. போடா போ 
  20. வாசு வா?
  21. விதேச தேவி 
  22. வை பூவை
  23. கைதி வேதிகை
  24. யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
    காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா                            (திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 10 மாலை மாற்றுத் திருப்பதிகங்களுள் ஒன்று)
  25. நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
    காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.
Share:

ஜனவரி 26 சிறப்புகள்

ஜனவரி 26 சிறப்புகள்

னவரி 26 என்பது  இன்று நாம் உலகளவில் பயன்படுத்தும் நாட்காட்டியான கிரிகோரியன் ஆண்டின் 26ஆம் நாள் ஆகும்.
இத்தகைய ஜனவரி26 ஆம் நாளில் நம் நாட்டில் நிகழ்ந்த சில சிறப்புகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.




  • 1844 - குஜராத் மாநிலம் போர்பந்தரில் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்டது.
  • 1862 - இந்தியாவில் முதன்முதலில் தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
  • 1866 - சூயஸ் கால்வாயில் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
  • 1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கம்.
  • 1888 - இந்தியாவில் தொலைபேசிமுறை துவக்கம்.
  • 1897 - சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில்  கலந்துகொண்டபின் சுவாமி விவேகானந்தர் அவர்கள் இந்தியா திரும்பினார்.
  • 1950 - இந்தியா குடியரசானது.
  • 1973 - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தொலைக்காட்சிநிலையம் அமைக்கப்பட்டது.

Share:

பறவைகள் பலவிதம்..

பறவைகள் பலவிதம்..


1.பையா எனும் பறவை மனிதனைப்போல் விசிலடிக்கும் திறனுடையது.

2.பெங்குவின் நீருக்கடியில் நீந்தும் திறனுடையது.

3. கிவி எனும் பறவைக்கு வயிற்றில் பல் உள்ளது.

4.நெருப்புக்கோழியானது கற்களைத்தின்னும் திறனுடையது.

5.வாத்து ஒருகண்பார்வை திறனுடையது.

6.ஆந்தையானது தனது கழுத்தை வட்டமாக சுழற்றும் தன்மையுடையது.

7.பிட்டா எனும் பறவை ஒன்பது வண்ணங்களையுடையது.

8.ஆண்டியன் காண்டர் எனும் பறவையாது 
சிறகையடிக்காமல் வெகுதூரம் பறக்கும் திறனுடையது.

9.பால்கன் எனும் பறவை வெகுதூரத்தில் பறக்கும் திறனுடையது.

10. ரோட் ரன்னர் எனும் பறவையாது பெயருக்கேற்ப சாலைகளில் ஓடும் திறமையுடையது.

11.சாண்ட் கிரவுஸ் எனும் பறவையாது தனது வயிற்றில் நீரை உறுஞ்சும் இறக்கையை கொண்டுள்ளது.

12.ஹம்மிங் எனும் பறவை பின்னோக்கி பறக்கும் திறனுடையது.

13.ஸ்பின் டைல்ட் ஸ்விப்ட் எனும் பறவை அதிவேகத்தில் பறக்கும் பறவையாகும்.

14.பாரடைஸ் எனும் சொர்க்கப்பறவை மிக அழகான இறக்கைகளை கொண்டுள்ளது.

15.லெம்மாஸீர் வல்சர் எனும் பறவை எலும்பை உடைக்கும் வல்லமையுடையது.

16.புறா ஓய்வெடுக்காமலே சுமார் 1000 கி.மீ. வரை பறக்கும் திறனுடையது.
Share:

புளுடூத் - திறக்கற்றை

புளுடூத் - திறக்கற்றை

இன்று நாம் பயன்படுத்தும்  புளுடூத் (திறக்கற்றை)  எனும் தொழில்நுட்பமானது தரவுகளை (தகவல்கள்) பிற சாதனங்களுக்கிடையில் பகிர்ந்துகொள்ள உதவும்ஒரு தகவல் தொழில்நுட்பமாகும்.  இதில்
2.4 கிகா ஹெர்ட்ஸ்  ரேடியோவைப்பயன்படுத்தி 720 கிலோ பைட் வேகத்தில் சாதனங்களை  ரிமோட் மூலம் இயக்கும் ஒரு தொழில்நுட்பமாகும்.
ஒவ்வொரு சாதனங்களுக்கும் ஒரு தொழில்நுட்பமுகவரி கொடுக்கப்படும். அவற்றை இயக்குவதற்கான இரகசிய குறீகளின் உதவியால் இயக்கப்படவேண்டிய சாதனங்கள் எளிதில் இயக்கப்படும். இந்த தொழில்நுட்பத்தை முதன்முதலில் கண்டுபிடித்தது ஐரோப்பாவைச் சேர்ந்த எரிக்ஸன் எனும் நிறுவனமாகும்.

புளுடூத் எனும் பெயர் எப்படி வந்ததுதெரியுமா?

புளூடூத்  எனும் சொல்  செருமானிய மொழிச்சொல்லான "ப்ளாடோன்" (Blátönn) எனும் சொல்லிலிருந்து  உருவான ஆங்கில வடிவம். இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த டென்மார்க்கின் முதலாம் ஹரால்ட் மன்னன்
" சிங்க் ஹெசால்ட் ப்ளாடண்ட் " என்பவரின் சிறப்புப் பெயராகும். அதீத விருப்பத்தின்காரமாக அதிகஅளவிலான 
 புளூபெரீசு பழங்களை உண்ட  இம்மன்னனின் பற்களில் நீலக்கறை படிந்து நீலநிறமாக தோற்றமளித்தது. இதனால்  மக்கள்  இம்மன்னனை "புளு டூத்" என்று அழைக்கத் தொடங்கினர். இவர் வேறுபட்ட டானிஷ் பழங்குடியினரை ஒன்றிணைத்து, அங்கிருந்த பல குறுநிலங்களை எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து ஒரே பேரரசாகக் கட்டமைத்தாராம். 
புளூடூத் தொழில்நுட்பமும் அவரைப் போலவே தகவல்தொடர்புகளை  ஒரே தரநிலைக்குக் கொண்டு வரும் செயலைச் செய்கிறது. இதற்காகத்தான்  இப்பெயர் இந்த தொழில்நுட்பத்திற்கும் புளுடூத் எனும்  பெயர் வழங்கப்பட்டது.

புளுடூத் சின்னம் (லோகோ) எப்படி வந்ததுதெரியுமா?




ஜெர்மானிய எழுத்துகளான  (ஹகால்) (Hagall) மற்றும் (பெர்க்கனான்) (Berkanan) ஆகியவை இணைந்த  இணைப்பெழுத்துக்களின் சேர்க்கையே புளுடூத் சின்னம் ஆகும். இந்த குறீடுகளின் விளக்கம் படமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Share:

இருபத்து ஆறு முதல் ஐம்பது வரை

இருபத்து ஆறு முதல்  ஐம்பது வரை



  • நமது பாதங்களில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை 26.
  • ஸ்பானிஷ் மொழியில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 27.
  • அரபி மொழியி உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 28.
  •  அஜந்தாவில் உள்ள குகைகளின் எண்ணிக்கை 29.
  • உலகில் தரைப்பாகத்தின் விழுக்காடு 30.
  • பாரசீக மொழியிலுள்ள ழுத்துக்களின் எண்ணிக்கை 31.
  • நமது பற்களின் எண்ணிக்கை 32.
  • ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
  • எல்லோராவில் உள்ள குகைகளின் எண்ணிக்கை 34.
  • தமிழில் உள்ள அணி வகைகள் 35.
  • பெண் குழந்தையின் பற்களின் எண்ணிக்கை 36.
  • சந்யாசி இராக எண் 37.
  • முதல் உலகப்போரில் கலந்துகொண்ட நாடுகளின் எண்ணிக்கை 38.
  • இயேசுவை சிலுவையில் அறையும்முன் அவரை 39 முறை சவுக்கால் அடித்தனராம்.
  • ஆண்குழந்தையின் பற்கள் 40.
  • காண்டா மிருகத்தின் சராசரி வயது 41.
  • நாயின் பற்களின் எண்ணிக்கை 42.
  • மனித உடலில் உள்ள சராசரி நீரின் அளவு 43 லிட்டர்.
  • இமயமலையின் வேர் தரைக்குக்கீழ்  44 மைல் ஆழத்தில் உள்ளது.
  • சென்னையிலுள்ள புதிய கலங்கரைவிளக்கத்தின் உயரம் 45 மீட்டர்.
  • தமிழில் ஒரு சொல்லுக்கு சுமார் 46 பொருள் உடைய சொற்கள் உள்ளன.
  • ஒரு மண்டலம் என்பது 48 நாட்களைக்கொண்டது.
  • சீனர்களின் மரண துக்க காலம் 49 நாட்கள்.
  • ஒரு கழுதை சுமார் 50 கிலோ எடையுள்ள சுமையை சுமக்கும்.

Share:

சர்வதேச தினங்கள் - தொகுப்பு

சர்வதேச தினங்கள்



ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO)
உலகில் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் சில நாட்களை சிறப்பு தினங்களாக அறிவித்துள்ளது. 
அத்தகைய சிறப்புவாய்ந்த தினங்களை
பலமூலங்களில் இருந்து சேகரித்து  இங்கு மாதவாரியாக  பட்டியலிட்டுள்ளேன்...


ஜனவரி

  • 26 - உலக சுங்கத்துறை தினம்
  • 30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரி

  • 02 - உலக சதுப்பு நில தினம்
  • 21 - உலக தாய்மொழிகள் தினம்
மார்ச்

  • 06 - உலக புத்தகங்கள் தினம்
  • 08 - உலக பெண்கள்கள் தினம்
  • 13 - உலக சிறுநீரகநோய் விழிப்புணர்வு தினம்
  • 15 - உலக நுகர்வோர் தினம்
  • 21 - உலக வன தினம்
  • 21- உலக   கவிதைகள் தினம் 
  • 22 - உலக தண்ணீர்  தினம்
  • 23 - உலக   தட்பவெட்பநிலை தினம்
  • 24 - உலக   காசநோய் தினம் 
ஏப்ரல்

  • 02 - உலக   சிறுவர்நூல் தினம்
  • 07 - உலக   சுகாதார  தினம்
  • 15 - உலக   நூலகர்கள்  தினம்
  • 18 - உலக நினைவுச்சின்னங்கள் தினம்
  • 22 - உலக புவி தினம்
  • 23 - உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் 
மே

  • 01 - உலகத் தொழிலாளர் தினம்
  • 03 - உலக சூரிய தினம்
  • 03 - உலக ஊடக விடுதலை தினம்
  • 04 -  உலக தீயணைக்கும் படையினர் தினம்
  • 08 - உலக செஞ்சிலுவை நாள்
  • 12 - உலக செவிலியர் நாள்
  • 15 -  உலக குடும்ப தினம்
  • 18 -  உலக அருங்காட்சிய தினம்
  • 31 - உலக  புகையிலை எதிர்ப்பு தினம்
ஜீன்

  • 05 - உலக சுற்றுச்சூழல் தினம்
  • 08 - உலகக் கடல் தினம்
  • 12 - உலக குழந்தை தொழிலார் ஒழிப்பு தினம் 
  • 14 - உலக இரத்த தான தினம்
  • 14 - உலக வலைப்பதிவர்கள் தினம்
  • 20 - உலக அகதிகள் தினம்
  • 27 - உலக நீரிழிவுநோய் எதிர்ப்பு தினம்
ஜீலை

  • 11 - உலக மக்கள்தொகை தினம்
  • 20 - சதுங்க தினம்

ஆகஸ்ட்

  • 01- உலக சாரணர் தினம்
  • 12 - உலக இளைஞர் தினம்

செப்டம்பர்

  • 08 - உலக எழுத்தறிவு தினம்
  • 15 - உலக மக்களாட்சி தினம்
  • 21 - உலக அமைதி நாள்
  • 27 - உலக சுற்றுலா தினம்

அக்டோபர்

  • 01 - சர்வதேச முதியோர் தினம்
  • 02 - உலக அகிம்சை தினம் 
  • 04 - உலக வனவிலங்குகள் தினம்
  • 05 - உலக ஆசிரியர்கள் தினம்
  • 09 - உலக தபால்கள் தினம்
  • 10 - உலக மனநல தினம்
  • 16 - உலக உணவு தினம்
  • 17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
  • 24 - ஐ.நா தினம்

நவம்பர்

  • 17 - உலக மாணவர்கள் தினம்
  • 20 - உலக குழந்தைகள் தினம்
  • 21 - உலக தொலைக்காட்சி தினம்

டிசம்பர்

  • 01 - உலக எயிட்ஸ் தினம்
  • 02 - உலக அடிமை ஒழிப்பு தினம்
  • 03 - உலக ஊனமுற்றோர் தினம்
  • 09 - உலக ஊழல் ஒழிப்பு தினம்
  • 10 - உலக மனித உரிமைகள் தினம்.
Share:

இல்லை... இல்லை... இல்லவே இல்லை ....


இல்லை... இல்லை...  இல்லவே இல்லை  ....


  1. ஆமைக்குப் பற்கள்  இல்லை.
  2. ஒட்டகத்திற்கு வியர்வை நாளங்கள் இல்லை.
  3. கிவி எனும் பறவைக்கு இறக்கைகள் இல்லை.
  4. மாங்ஸ் மற்றும் சயா எனும் பூனை வகைகளுக்கு வால் இல்லை.
  5. மீன்களுக்கு உமிழ்நீர் சுரப்பி இல்லை.
  6. அன்னாசி பழத்திற்கு விதைகள் இல்லை.
  7. நமது உதடுகள் வியர்ப்பது இல்லை.
  8. நமது கருவிழியில் இரத்தம் பாய்வது இல்லை.
  9. குயில்கள் கூடு கட்டுவது இல்லை.
  10. பன்னீர்ப் பூ பகலில் மலர்வது இல்லை.
  11. நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் இல்லை.
  12. ஹவாய் தீவில் பாம்புகள் இல்லை.
  13. யமுனை ஆறு கடலில் கலப்பது இல்லை. 
  14. குவைத் நாட்டில் ஆறுகள் இல்லை.
  15. சவூதி அரேபியா நாட்டில் நதிகள் இல்லை. 
  16. பூடான் நாட்டில் திரையரங்குகள் இல்லை. 
  17. மாசிடோனியா நாட்டிற்கு தேசியக்கொடி இல்லை. 
  18. பிரான்ஸ் நாட்டில் திரைப்படத்திற்கு தணிக்கைமுறை இல்லை. 
  19. ஜோர்டான் எனும் ஆற்றில் மீன்களே  இல்லை. 
  20. காந்தியடிகள் விமானத்தில் பயணித்ததே இல்லை. 
Share:

பருவங்கள் ஏழு

பருவங்கள் ஏழு


ஆண்களின் ஏழு பருவங்கள்

  1. பாலன்............1 முதல் 7 வயது வரை
  2. மீளி.................8 முதல் 10 வயது வரை 
  3. மறவோன்....11 முதல் 14 வயது வரை
  4. திறவோன்....15வது  வயது
  5. காளை...........16வது  வயது
  6. விடலை.......17 முதல் 30 வயது வரை
  7. முதுமகன்....30 வயதுக்கு மேல்.

பெண்களின் ஏழு பருவங்கள்


  1. பேதை  ...................5 வயது முதல் 7 வயது வரை
  2. பெதும்பை...........  8 வயது முதல் 11 வயது வரை
  3. மங்கை................. 12 வயது முதல் 13 வயது வரை
  4. மடந்தை...............14 வயது முதல் 19 வயது வரை
  5. அரிவை............... 20 வயது முதல் 25 வயது வரை
  6. தெரிவை............. 26 வயது முதல் 31 வயது வரை
  7. பேரிளம் பெண். 32 வயது முதல் 40 வயது வரை

பூவின் ஏழு பருவங்கள்

  1. அரும்பு............அரும்பும் நிலை 
  2. மொட்டு...........மொட்டு விடும் நிலை 
  3. முகை..............முகிழ்க்கும் நிலை
  4. மலர்.................மலரும் நிலை 
  5. அலர்................மலர்ந்த நிலை 
  6. வீ.......................வாடும் நிலை
  7. செம்மல்.........வதங்கும் நிலை
Share:

ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு...

ஆயக்கலைகள்


ஆதித்தமிழன் கண்டறிந்து கற்று, தலைமுறை தலைமுறையாக  கற்பித்து  வந்த கலைகளே  
ஆயக்கலைகள்.ஆயக்கலைகள் அறுபத்தி நான்கென்று நாமறிந்ததே எனினும் அவை, எவையெவை என நம்மில் அறிந்தவர்கள் எத்தனை பேர் என வினவினால் விழிபிதுங்கும் நமக்கு... (நான் உட்பட)
அப்படி அந்த அறுபத்தி நான்கு என்னென்ன என நான் அறியமுற்பட்டதில் கிடைத்த தகவல்கள் 
இங்கே நமக்காக....

1. எழுத்திலக்கணம் - அகரவிலக்கணம்
2.  எழுத்தாற்றல் -  லிகிதம்
3. கணிதவியல் - கணிதம்
4. மறைநூல் - வேதம்
5. தொன்மம் - புராணம்
6. இலக்கணவியல்  - வியாகரணம்
7. நயனூல் - நீதி சாத்திரம்
8. கணியம்  - சோதிட சாத்திரம்
9. அறநூல் - தரும சாத்திரம்
10. ஓகநூல் - யோக சாத்திரம்
11. மந்திர நூல் - மந்திர சாத்திரம்
12. நிமித்திக நூல் - சகுன சாத்திரம்
13. கம்மிய நூல் - சிற்ப சாத்திரம்
14. மருத்துவ நூல் -  வைத்திய சாத்திரம்
15. உறுப்பமைவு நூல் - உருவ சாத்திரம்
16. மறவனப்பு - இதிகாசம்
17. வனப்பு - காவியம்
18. அணிநூல் - அலங்காரம்
19. மதுரமொழிவு - மதுரபாடணம்
20. நாடகம் - நாடகக்கலை
21. நடம் - நிருத்தம்
22. ஒலிநுட்ப அறிவு - சத்தப் பிரமம்
23. யாழ் - வீணை);
24. குழல் - வேனு
25. மதங்கம் - மிருதங்கம்
26. தாள இயல் - தாளம்
27. விற்பயிற்சி - அகத்திரவித்தை
28. பொன் நோட்டம் - கனக பரீட்சை
29. தேர்ப்பயிற்சி - ரத ப்ரீட்சை30. யானையேற்றம் - கச பரீட்சை
31. குதிரையேற்றம் - அசுவ பரீட்சை
32. மணிநோட்டம் - ரத்தின பரீட்சை
33. நிலத்து நூல்/மண்ணியல் - பூமி பரீட்சை
34. போர்ப்பயிற்சி - சங்கிராமவிலக்கணம்
35. மல்லம்  - மல்ல யுத்தம்
36. கவர்ச்சி - ஆகருடணம்
37. ஓட்டுகை - உச்சாடணம்
38. நட்புப் பிரிப்பு - வித்துவேடணம்
39. காமநூல் - மதன சாத்திரம்
40. மயக்குநூல் - மோகனம்
41. வசியம் - வசீகரணம்
42. இதளியம் - ரசவாதம்
43. இன்னிசைப் பயிற்சி - காந்தருவ வாதம்
44. பிறவுயிர் மொழியறிகை - பைபீல வாதம்
45. மகிழுறுத்தம் - கவுத்துக வாதம்
46. நாடிப்பயிற்சி - தாது வாதம்
47. கலுழம் - காருடம்
48. இழப்பறிகை - நட்டம்
49. மறைத்ததையறிதல் - முஷ்டி
50. வான்புகவு - ஆகாயப் பிரவேசம்
51. வான்செலவு - ஆகாய கமனம்
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் - பரகாயப் பிரவேசம்
53. தன்னுருக் கரத்தல் - அதிருசியம்
54. மாயச்செய்கை - இந்திரசாலம்
55. பெருமாயச்செய்கை- மகேந்திரசாலம்
56. அழற்கட்டு - அக்கினித் தம்பனம்
57. நீர்க்கட்டு - சலத்தம்பனம்
58. வளிக்கட்டு - வாயுத்தம்பனம்
59. கண்கட்டு - திருட்டித்தம்பனம்
60. நாவுக்கட்டு - வாக்குத்தம்பனம்
61. விந்துக்கட்டு - சுக்கிலத்தம்பனம்
62. புதையற்கட்டு - கனனத்தம்பனம்
63. வாட்கட்டு - கட்கத்தம்பனம்
64 அவத்தை பிரயோகம் - சூனியம்

Share:

தமிழக வாகன குறியீட்டு எண்கள்...



தமிழக வாகன குறியீட்டு எண்கள்..



பயணங்கள் என்பது நம் வாழ்வோடு பிண்ணிப்பிணைந்தது. அவற்றில் பெரும்பங்குவகிப்பது வாகனங்கள்.நம் வாழ்வில் நம்மைக்கடந்து செல்லும் வானங்கள் பற்ப்பல.சில வாகனங்கள் நம்மை கடந்துசெல்வதுமட்டுமல்லாது நம்முள்சில தாக்கங்களையும் ஏற்ப்படுத்திச்செல்வதுண்டு அத்தகைய வானங்களைப்பற்றி சில தகவல்கள் நமக்காக இங்கே.....நம் நாட்டில் வாகனங்களுக்கு மாநிலங்கள் , மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுகள் அடிப்படையில் பதிவெண்கள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பதிவு செய்யப்படும் அனைத்து வாகனங்களின் பதிவெண்களும் "TN-NN X NNNN" என்ற வடிவில் உள்ளன. KL என்ற எழுத்து முன்னொட்டு அனைத்து கேரளா வாகனங்களுக்கும்TN என்ற எழுத்து முன்னொட்டு அனைத்து தமிழ்நாட்டு வாகனங்களுக்கும் பொதுவானது. இதையடுத்து வரும் இரு எண்கள் வாகனம் பதிவு செய்யப்படும் மாவட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்து அலுவலகத்தைப் பொறுத்து மாறும். அப்பதிவெண்களின் பட்டியல் இங்கே....
TN-01 சென்னை அயனாவரம்

TN-02 சென்னை அண்ணாநகர்

TN-03 சென்னை தண்டையார்பேட்டை

TN-04 சென்னை ராயபுரம்

TN-05 சென்னை குளத்தூர்

TN-06 சென்னை மந்தைவெளி

TN-07 சென்னை திருவான்மியூர்

TN-09 சென்னை கே.கே.நகர்

TN-10 சென்னை விருகம்பாக்கம்

TN-11 சென்னை தாம்பரம்

TN-12 சென்னை பூந்தமல்லி

TN-13 சென்னை அம்பத்தூர்

TN-14 சென்னை சோலிங்கநல்லூர்

TN-15 உளுந்தூர்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி

TN-16 திண்டிவனம் மற்றும் செஞ்சி

TN-18 சென்னை செங்குன்றம்

TN-19 செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம்

TN-20 திருவள்ளூர்

TN-21 காஞ்சிபுரம் மற்றும் திருப்பெரும்புதூர்

TN-22 மீனம்பாக்கம்

TN-23 வேலூர் மற்றும் குடியாத்தம்

TN-24 கிருஷ்ணகிரி

TN-25 திருவண்ணாமலை மற்றும் ஆரணி

TN-27 சேலம் (தற்பொழுது பயன்பாட்டில் இல்லை)

TN-28 நாமக்கல் வடக்கு மற்றும் ராசிபுரம்

TN-29 தர்மபுரி,பாலக்கோடு மற்றும் அரூர்

TN-30 சேலம் மேற்கு மற்றும் ஓமலூர்

TN-31 கடலூர், விருதாச்சலம், நெய்வேலி மற்றும்பண்ருட்டி

TN-32 விழுப்புரம்

TN-33 ஈரோடு கிழக்கு

TN-34 திருச்செங்கோடு

TN-36 கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் பவானி

TN-37 கோயம்புத்தூர் தெற்கு மற்றும் சூலூர்

TN-38 கோயம்புத்தூர் வடக்கு

TN-39 திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி

TN-40 மேட்டுப்பாளையம்

TN-41 பொள்ளாச்சி மற்றும் வால்பாறை

TN-42 திருப்பூர் தெற்கு மற்றும் காங்கயம்

TN-43 ஊட்டி மற்றும் கூடலூர்

TN-45 திருச்சிராப்பள்ளி மேற்கு மற்றும் மணப்பாறை

TN-46 பெரம்பலூர்

TN-47 கரூர், அரவக்குறிச்சி மற்றும் குளித்தலை

TN-48 திருவரங்கம்,முசிறி,துறையூர் மற்றும் லால்குடி

TN-49 தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை

TN-50 திருவாரூர் மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி

TN-51 நாகப்பட்டினம்

TN-52 சங்ககிரி மற்றும் மேட்டூர்

TN-54 சேலம் கிழக்கு

TN-55 புதுக்கோட்டை இலுப்பூர் மற்றும் அறந்தாங்கி

TN-56 பெருந்துறை

TN-57 திண்டுக்கல் பழனி

TN-58 மதுரை தெற்கு மற்றும் திருமங்கலம்

TN-59 மதுரை வடக்கு மற்றும் மேலூர்

TN-60 தேனி மற்றும் பெரியகுளம்
TN-61 அரியலூர்

TN-63 சிவகங்கை மற்றும் காரைக்குடி

TN-64 மத்திய மதுரை

TN-65 ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி

TN-66 மத்திய கோயம்புத்தூர்

TN-67 விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை

TN-68 கும்பகோணம்

TN-69 தூத்துக்குடி

TN-70 ஓசூர்

TN-72 திருநெல்வேலி மற்றும் வள்ளியூர்

TN-73 இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம்

TN-74 நாகர்கோவில்

TN-75 மார்த்தாண்டம்

TN-76 தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம்

TN-77 ஆத்தூர் மற்றும் வாழப்பாடி

TN-78 தாராபுரம் மற்றும் உடுமலைபேட்டை

TN-79 சங்கரன்கோவில்

TN-81 திருச்சிராப்பள்ளி கிழக்கு மற்றும் திருவரம்பூர்

TN-82 மயிலாடுதுறை மற்றும் சீர்காழி

TN-83 வாணியம்பாடி திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர்

TN-84 திருவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி

TN-85 சென்னை குன்றத்தூர்

TN-86 ஈரோடு மேற்கு

TN-87 சிதம்பரம்

TN-88 நாமக்கல் தெற்கு மற்றும் பரமத்தி வேலூர்

TN-90 சேலம் தெற்கு

TN-91 திருச்செந்தூர்

TN-99 கோயம்புத்தூர் மேற்கு.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான TN-/N எனக் குறிப்பிட்டுள்ள வாகனங்கள் தமிழில் குறிப்பிடப்படும் போது த.நா-/நா எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது தமிழ்நாடு/ நாட்டுடமையாக்கப்பட்டது என்பதன் சுருக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலகப் பயன்பாட்டு வாகனங்களில் TN-/G எனக் குறிப்பிட்டுள்ள வாகனங்கள் தமிழில் குறிப்பிடப்படும் போது த.நா-/அ எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது தமிழ்நாடு/அரசு என்பதன் சுருக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.


Share:

சரிகமபதநி என்பதன் அர்த்தம் தெரியுமா?

சரிகமபதநி ........

சரிகமபதநி என்பதன் அர்த்தம்  தெரியுமா?
சரிகமபதநி என்பது ஓர் கர்நாடக சங்கீதம்.
அதன் விரிவாக்கம் இங்கே.................

ச-சட்ஜமம் --மயிலின் அகவல்.
ரி-ரிஷபம் --காளையின் ஹூங்காரம்.
க -காந்தாரம் --ஆட்டின் குரல்.
ம -மத்யமம் --கொக்கின் குரல்.
ப -பஞ்சமம் --குயிலின் குரல்
த -தைவதம் --குதிரையின் கனைப்பு.
நி -நிஷாதம் --யானையின் பிளிறல்.
Share:

காளையார்கோவில்

காளையார்கோவில்

13-01-2014,திங்கட்கிழமை காலை 10.30 மணி
ஐந்து வருடங்களுக்குப் பிறகு அன்றுதான் எனது பாதம் அம்மண்ணை முத்தமிட்டது!
எனது பாதம் அம்மண்ணைத்தொட்டவுடன் எனக்குள் ஓர் இனம்புரியாத சந்தோசம்,பூரிப்பு,அளவற்ற மகிழ்ச்சி இன்னும் என்னன்னவோ.....
ஆம்! என்னை ஓர் ஆசிரியராக உருவாக்கிய ஊர் அல்லவா அது.
எனக்கு விபரம் தெரியவந்த பருவத்தில் உலகம் இதுதான் என உணரச் செய்த இடம். 

நான் எனது ஆசிரியர் பட்டயப் பயிற்சியை இங்குள்ள மாவட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனத்தில் பயின்றிருக்காவிடில் என் வாழ்வின் பகுதி சந்தோசமான நாட்களை இழந்திருக்கக்கூடும்.அந்த அளவிற்கு
எனக்குள் ஓர் ஆனந்தத்தையும் அனுபவத்தையும் கொடுத்த ஊர்.
ஓர் சான்றிதழ் தேவைக்காக நான் அன்று அங்கு செல்ல நேர்ந்தது.

எனது நிறுவனத்தில் நான் பயின்ற வகுப்பறை,தங்கியிருந்த விடுதி,நண்பர்களுடன் வட்டமடித்த இடங்கள் இவையனைத்தும் பார்த்தபொழுது எனக்குள் ஓர் சோகம்,அத்தகைய தருணங்கள் மீண்டும் கிடைக்காதா என்ற ஏக்கம் ,விவரிக்க இயலாத அளவிற்கு மனதினுள் ஒரு தாக்கம்.சான்றிதழைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்ப நேர்கையில் தாயைவிட்டுப் பிரியும் சிறுபிள்ளைபோல் மனம் மௌனமாய் அழத்தொடங்கிற்று.............
காளையார்கோவில்-சிவகங்கை மாவட்டம்
--- கல்லைவெங்கட் என்கிற
சி.வெங்கடேசன்,
2007-2009
மாவட்டக் கல்விப் பயிற்சி நிறுவனம்,
காளையார்கோவில்.
Share:

Kallaivenkat











Share:

Visited

FIND ME ON TWITTER

POSTS FROM FACEBOOK

Recent Posts